அரியலூர், பிப். 26: அரியலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கூத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி, கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, காடூர், நமங்குணம், புதுவேட்டக்குடி, கோயில்பாளையம், கீழப்பெரம்பலூர், துங்கபுரம், குழுமூர் மற்றும் கிளியப்பட்டு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு கூத்தூர் துணை மின் நிலைய உதவி செயற்பெரியாளர் செல்லப்பாங்கி தெரிவித்துள்ளார்.